நடைபவனியில் ஈடுபட்ட கூட்டு எதிர்க் கட்சியின் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி உறுப்பினர்கள் டார்லி வீதியில் அமைந்துள்ள கட்சியின் தலைமைக் காரியாலயத்தின் முன்னால் செல்லும் போது கூச்சலிட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஸ்ரீ ல.சு.க. தலைமையகத்திற்கு முன்னால் கூச்சலிடும்போது கட்சியின் போஷகர் மஹிந்த ராஜபக்ஷவும் முன்னாள் பயணித்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
இவ்வாறு கட்சியின் தலைமையகத்துக்கு முன்னால் சென்றவர்கள், “இது சிறிசேனவின் அப்பக்கடை”, “டார்லி பாதையிலுள்ள அப்பக் கடை” எனக் கூறிக் கொண்டே கூச்சலிட்டுச் கொண்டு சென்றுள்ளதாகவும் கூறப்படுகின்றது.