க.கிஷாந்தன்-
ஹட்டன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹட்டன் செம்புவத்தை தோட்டத்தில் 19.08.2016 அன்று மதியம் 22 வயது மதிக்கதக்க இளைஞன் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இவ்வாறு உயிரிழந்தவர் குறித்த தோட்டத்தின் வசிக்கும் சிவலிங்கம் சசிகுமார் வயது 22 என அடையாளம் காணப்பட்டுள்ளது.
இந்த இளைஞனின் மரண விசாரணை தொடர்பில் ஹட்டன் பொலிஸார் விசாரணையை முன்னெடுத்து வருகின்றனர். அதேவேளை இளைஞன் தூக்கிட்டமைக்கான காரணம் கண்டறியப்படாத நிலையில் சடலத்தை டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. குறித்த இளைஞன் தனது வீட்டிலே தூக்கிட்டு கொண்டமை குறிப்பிடதக்கது.