வற் வரி சீர்த்திருத்தில் மேலும் சில திருத்தங்கள்

வற் வரி சீர்த்திருத்தில் மேலும் சில திருத்தங்கள் கொண்டுவரப்படவுள்ளதாக நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். இந்த சீர்திருத்த சட்ட மூலம் நாளைய தினம் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

வற் வரி சீர்த்திருத்தம் தொடர்பில் உயர் நீதிமன்றத்தினால் வழங்கப்பட்ட தீர்ப்பு, நாளைய தினம் சபாநாயகரினால் நாடாளுமன்றத்தில் அறிவிக்கப்படும் என அமைச்சர் ரவி கருணாநாயக தெரிவித்துள்ளார். இதேவேளை எதிர்வரும் 10ஆம் 11ஆம் திகதிகளில் பாராளுமன்றில் விவாத்திற்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ள வற்வரி சீர்திருத்த சட்ட மூலத்திற்கு தாம் ஆதரவு அளிக்க உள்ளதாக, அமைச்சர் சரத் அமுனுகம தெரிவித்துள்ளார். எனினும் குறித்த சட்ட மூலத்திற்கு ஆதரவு வழங்குவதற்கு, தாங்கள் தயாராக இல்லை என்று ராஜாங்க அமைச்சர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -