வற் வரி சீர்த்திருத்தில் மேலும் சில திருத்தங்கள் கொண்டுவரப்படவுள்ளதாக நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். இந்த சீர்திருத்த சட்ட மூலம் நாளைய தினம் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
வற் வரி சீர்த்திருத்தம் தொடர்பில் உயர் நீதிமன்றத்தினால் வழங்கப்பட்ட தீர்ப்பு, நாளைய தினம் சபாநாயகரினால் நாடாளுமன்றத்தில் அறிவிக்கப்படும் என அமைச்சர் ரவி கருணாநாயக தெரிவித்துள்ளார். இதேவேளை எதிர்வரும் 10ஆம் 11ஆம் திகதிகளில் பாராளுமன்றில் விவாத்திற்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ள வற்வரி சீர்திருத்த சட்ட மூலத்திற்கு தாம் ஆதரவு அளிக்க உள்ளதாக, அமைச்சர் சரத் அமுனுகம தெரிவித்துள்ளார். எனினும் குறித்த சட்ட மூலத்திற்கு ஆதரவு வழங்குவதற்கு, தாங்கள் தயாராக இல்லை என்று ராஜாங்க அமைச்சர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.