குருநாகலில் இன்று (10) நடைபெறவுள்ள பொதுபல சேனாவின் விஷேட கூட்டத்திற்கு விசேட அதிரடி படையின் யாரும் வரவில்லை என்றும் இதுவரை 05-10 பொலிஸாருக்குள்ளே அங்கு கடமைபுரிந்து வருவதாகவும் அங்கிருந்து எமது செய்தியாளர் தெரிவித்தார்.
இது தொடர்பில் இம்போட் மிரர் செய்திப்பிரிவு அங்கு களத்தில் உள்ள றிஸ்வி ஜவஹர் ஷாவை தொடர்பு கொண்டு கேட்ட போது.
தற்போது குருநாகல் பிரதேசத்தின் ஊர்களுக்குள் பொலிசார் மாத்திரம் கடமை புரிந்து வருவதாகவும், 60 விசேட அதிரடி படையினர்கள் அந்த பிரதேசத்திற்கு வெளியே கடமை புரிந்து வருவதாகவும் பிரச்சினைகள் ஏதும் எழுப்பட்டும் சந்தர்ப்பத்திற்கு அவர்கள் விரைவதாகவும் தெரிவித்தார்.