எஸ்.அஷ்ரப்கான்-
இளைஞர் விவகார இராஜாங்க அமைச்சின் இளைஞர் பாரளுமன்றத்தினால் “YOUTH GOT TALAENT” சமூக மற்றும் இளைஞர் அபிவிருத்தி திட்டத்திக்கு அம்பாரை மாவட்டத்திலுள்ள பிரதேச செயலகங்களில் பிரதேச தெரிவுக் குழுவினால் நேர்முகப் பரீட்சைகள் நடைபெற்று வருகின்றது.
நாவிதன்வெளி பிரதேச செயலகப் பிரிவில் “YOUTH GOT TALAENT” சமூக மற்றும் இளைஞர் அபிவிருத்தி திட்டத்திக்கான நேர்முகப்பரீட்சை பிரதேச தெரிவுக் குழுவின் ஏற்பாட்டில் நாவிதன்வெளி பிரதேச செயலாளர் எஸ்.கரன் தலைமையில் நாவிதன்வெளி கலாச்சார மத்திய நிலையத்தில் நடைபெற்றது.
நாவிதன்வெளி பிரதேச செயலக நேர்முகப்பரீட்சை சம்மாந்துறை தொகுதி இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் ஆர்.லிகீர்தன், நாவிதன்வெளி பிரதேச செயலக பிரதி திட்டமிடல் பணிப்பாளர் ஏ.மோகனகுமார், நாவிதன்வெளி பிரதேச செயலக இளைஞர் சேவை அதிகாரி என்.ஜெயராஜ், நாவிதன்வெளி பிரதேச செயலக தொழிநூட்ப உத்தியோகத்தர் எஸ்.விஜிந்திரன், அம்பாரை மாவட்ட இளைஞர் சம்மேளனத்தின் தலைவர் ரீ.சுதன், நாவிதன்வெளி பிரதேச சம்மேளனத்தின் தலைவர் எம்.முஹம்மட் ஜபீர் உள்ளிட்ட பிரதேச தெரிவுக் குழுவினர் கலந்துகொண்டனர்.
இதில் நாவிதன்வெளி பிரதேச செயலகப் பிரிவிலுள்ள 18 இளைஞர் கழகங்களினால் 21 அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் முன்வைக்கப்பட்டன. பிரதேச தெரிவுக்குழுவினர் அம்பாரை மாவட்ட தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்திற்கு அறிக்கை சமர்ப்பித்துள்ளனர்.
இதன்போது அம்பாரை மாவட்டத்தில் சாய்ந்தமருது, சம்மாந்துறை, காரைதீவு, கல்முனை தமிழ் மற்றும் கல்முனை முஸ்லிம், நாவிதன்வெளி ஆகிய பிரதேச செயலங்களில் இன்று பிரதேச தெரிவுக் குழுவினால் “YOUTH GOT TALAENT” சமூக மற்றும் இளைஞர் அபிவிருத்தி திட்டத்திக்கான நேர்முகப்பரீட்சைகள் இடம்பெற்றமை குறிப்பிடதக்கது.