தலவாக்கலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹொலிரூட் தோட்டத்தில் நான்கரை வயது குழந்தை ஒருவரை துஷ்பிரயோகம் செய்த 13 வயது சிறுவனை, நுவரெலியா மாவட்ட நீதவான் முன்னிலையில் இன்று ஆஜர்படுத்தவுள்ளதாக தலவாக்கலை பொலிஸார் தெரிவித்தனர்.
சில தினங்களுக்கு முன் 4 1/2 வயது சிறுமி ஒருவரை துஷ்பிரயோகம் செய்த குறித்த சிறுவன், தலைமறைவாகியிருந்த நிலையில் தலவாக்கலை பொலிஸாரால், நேற்று மாலை கைது செய்யப்பட்டான்.
பாலியல் தொடர்பான ஆபாச காட்சிகளையும் படங்களையும் பார்த்ததன் விளைவாகவே இச்சம்பவம் நேர்ந்துள்ளதாக ஆரம்பக் கட்ட விசாரணையிலிருந்து தெரியவந்துள்ளது.
பாதிக்கப்பட்ட சிறுமி, நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பெற்றோரே மிகவும் அவதானம் நம் குழந்தைச்செல்வங்கள் வழிதவறாமல் பார்த்துக்கொள்வது நம் பொறுப்பு அல்லவா...