பணத்தினை திருடிய 18 வயதுடைய ஒருவருக்கு மூன்று மாதம் சிறைதண்டனை விதிப்பு..!

திருகோணமலை உப்புவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் கடந்த வருடம் ஒரு இலட்சம் ரூபாய் பணத்தினை திருடிய நபர் ஒருவருக்கு மூன்று மாதம் கட்டாய சிறைதண்டனை விதித்து திருகோணமலை நீதிமன்ற நீதிவான் எல்.எச் விஸ்வாணந்த பெர்ணாண்டோ இன்று புதன்கிழமை (14) உத்தரவிட்டார். திருகோணமலை, பாலையூற்று, பகுதியைச் சேர்ந்த 18 வயதுடைய ஒருவருக்கே அத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 

கடந்த வருடம் திருகோணமலை பாலையூற்று பகுதியில் தேவாலயம் ஒன்றில் ஒரு இலட்சம் ரூபாய் பணத்தினை திருடியதாக பொலிஸாரினால் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்த நிலையிலே குறித்த நபரை குறித்த வழக்கில் குற்றவாளியாக இனங்கண்டே மூன்று மாதம் சிறைதண்டனை விதித்து நீதிவான் உத்தரவிட்டார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -