திருகோணமலை உப்புவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் கடந்த வருடம் ஒரு இலட்சம் ரூபாய் பணத்தினை திருடிய நபர் ஒருவருக்கு மூன்று மாதம் கட்டாய சிறைதண்டனை விதித்து திருகோணமலை நீதிமன்ற நீதிவான் எல்.எச் விஸ்வாணந்த பெர்ணாண்டோ இன்று புதன்கிழமை (14) உத்தரவிட்டார். திருகோணமலை, பாலையூற்று, பகுதியைச் சேர்ந்த 18 வயதுடைய ஒருவருக்கே அத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த வருடம் திருகோணமலை பாலையூற்று பகுதியில் தேவாலயம் ஒன்றில் ஒரு இலட்சம் ரூபாய் பணத்தினை திருடியதாக பொலிஸாரினால் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்த நிலையிலே குறித்த நபரை குறித்த வழக்கில் குற்றவாளியாக இனங்கண்டே மூன்று மாதம் சிறைதண்டனை விதித்து நீதிவான் உத்தரவிட்டார்.