வர்த்தகர் ஷகீப் கொலை மேலும் ஒருவர் கைது : 5 வர்த்தகர்களின் கடவுச்சீட்டு தடை இரத்து

கொழும்பு பம்பலப்பிட்டியை சேர்ந்த வர்த்தகர் மொஹமட் சுலைமான் கொலை சம்பவத்துடன் தொடர்புடையவர் எனக் கூறப்படும் மற்றுமொரு நபர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட இந்த சந்தேக நபரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான் நிஷாந்த பீரிஸ் உத்தரவிட்டுள்ளார்.

இந்த நபருடன் மொத்தமான 9 பேர் வர்த்தக சுலைமான் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். மேலும் இந்த வழக்கில் 5 வர்த்தகர்களின் கடவுச்சீட்டுக்களை தடைசெய்யுமாறு பிறப்பிக்கப்பட்டிருந்த உத்தரவை நீதவான் இன்று -09- இரத்துச் செய்து உத்தரவிட்டார்.

குறித்த வர்த்தகர்களுக்கு இந்த கொலை சம்பவத்துடன் தொடர்பில்லை என குற்றப் புலனாய்வு பிரிவினர் நீதிமன்றத்திற்கு அறிவித்ததை அடுத்தே இந்த தடையை நீக்கி நீதவான் உத்தரவிட்டுள்ளார். வர்த்தகர் சுலைமான் கப்பம் கோரி கடத்திச் செல்லப்பட்டிருந்ததுடன் கடத்திச் செல்லும் மேற்கொண்ட தாக்குதலில் அவர் உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக சுலைமானின் நிறுவனத்தில் பணிப்புரிந்த நிதி பொறுப்பாளர் உட்பட 8 பேர் இதற்கு முன்னர் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -