6 வயது சிறுமியை கொன்று புதைத்த- 16 வயது சிறுவன் கைது -திருகோணமலை சம்பூரில் சம்பவம்


நேற்று (08) பி.ப சடலமாக மீட்கப்பட்ட ஜெகதீஸ்வரன் அஜந்தா எனும் 6 வயது சிறுமி, துஷ்பிரயோகத்துக்குட்படுத்திய பின் கொலை செய்து புதைக்கப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் தெரிவிக்கின்றனர்.

சிறுமியை நேற்று காலை 10 மணியளவில் காணவில்லையென அவர்களது பெற்றோரும் கிராம அபிவிருத்திச் சங்க உறுப்பினர்களும் சம்பூர் பொலிஸில் முறைப்பாடு செய்த நிலையில் தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டபோது காட்டுப் பகுதியில் புதைக்கப்பட்ட நிலையில் சடலத்தை மீட்டுள்ளனர்.

குறித்த சிறுமியின் தாய் வெளிநாடு சென்றுள்ளார் எனவும் இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் சம்பூர் பொலிஸார் தெரிவித்தனர். தினகரன்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -