சரித்திர நாயகன் “மர்ஹூம் எம்.எச்.எம்.அஷ்ரப்”


மனித மாமிசம் திண்ணும்
பாசிஷர்களிடமிருந்து
சமூகத்தின் குரலாய் நின்று
விடுதலை பெற்று தந்தாய்…!!

அயராது உழைத்த
உன் வியர்வைத் துளியால்
எம் சமூகத்துக்கு முகவரி
பெற்று தந்தாய்…!!

தனித்து நின்ற எம் மரத்தை
வளர்க்க உரமாய் என்றும்
உள்ள போராளிகளை
உருவாக்கித் தந்தாய்…!!

தலையே சாய்ந்தாலும்
எதற்கும் விலைபோகாத
தலைமைத்துவத்தை
காட்டிச் சென்றாய்…!!

கல்வியறிவால் இருளில்
மூழ்கிய எம்மை
உன் தயவால்
ஒலியில் கொண்டு சேர்த்தாய்…!!

உள்ளிருந்து துரோகம்
செய்ய நினைத்த
உன் துரோகிகளை
மௌனித்து
வென்று காட்டினாய்…!!

வெளியில் கூப்பாடு
போட்ட எதிரிகளை
உன் வீர வசனங்கலால்
நடு நடுங்க வைத்தாய்…!!

துவேசத்தை பரப்பிய
இனவாதிகளுக்கு
பிறர் இனமும் போற்ற
வாழ்ந்து காட்டினாய்…!!

மண்ணில் முளைத்த
உன்னை மண்ணில்
வீழ்த்த முடியாத உன்
எதிரிகள் விண்ணில் பாய்ந்தனர்…!!

விண்ணில் பறந்தாய்
மண்ணுக்கு இறையாகினாய்
ஆனால் என்றும் மனித உள்ளங்களில் வாழ்கின்றாய்…!!

உன்னை வாழ்த்தி பேசியவர்கள்தான்
வீழ்த்த முனைந்தார்கள்
அதுதான் உன்னை என்றென்றும்…!!

சரித்திர நாயகனாய் இடம் பிடிக்க வைத்துள்ளது…!

வை.எம்.பைரூஸ்,
வாழைச்சேனை.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -