கணவர் வைத்தியசாலையில் மனைவி மாரடைப்பால் மரணம்..!

அப்துல்சலாம் யாசீம்-
திருகோணமலை-இறக்ககண்டி -வாழையூற்று பகுதியில் வீடொன்றினுள் உயிரிழந்த நிலையில் வயோதிபப்பெண்னின் சடலமொன்று இன்று (11) மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இவ்வாறு மீட்கப்பட்ட சடலம் இறக்ககண்டி-05ம் வட்டாரத்தைச்சேர்ந்த பத்மநாதன் வல்லிநாயகி (56வயது) எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் குறித்து தெரியவருவதாவது- கணவரான சுந்தரம் பத்மநாதன் (59வயது) சுகவீனம் காரணமாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் அவர் தொடர்பாக பேசிவிட்டு தூங்குவதற்கு வயோதிபப்பெண் சென்றதாகவும் பொலிஸ் ஆரம்பகட்ட விசாரணையின் மூலம் தெரியவந்துள்ளது. அதனையடுத்து இன்று காலை வீட்டில் தென்படாத நிலையில் அயலவர்கள் சென்று பார்வையிட்ட போது வீட்டில் இறந்து கிடப்பதை அவதானித்ததாகவும் பொலிஸாருக்கு தெரிவித்தனர்.

இதனையடுத்து சடலத்தை மீட்ட பொலிஸார் மீட்கப்பட்ட சடலத்தை சட்ட வைத்திய பரிசோதனைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு கொண்டு சென்றனர். நிலையில் சட்ட வைத்திய அதிகாரி ஹரித்த தென்னகோன் மரண விசாரணையை மேற்கொண்டார். விசாரணையின் போது வயோதிபப்பெண் மாரடைப்பால் உயிரிழந்துள்ளதாகவும் சட்ட வைத்தியதிகாரி தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -