இன்று அதிகாலை இடம்பெற்ற கோர விபத்து - ஒருவர் உயிரிழப்பு

க.கிஷாந்தன்-
லிந்துலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அட்டன் - நுவரெலியா பிரதான வீதியில் கொழும்பு பகுதியிலிருந்து லிந்துலை நாகசேனை வலஹா கொலனி பகுதியை நோக்கி சென்ற முச்சக்கரவண்டி ஒன்று வீதியை விட்டு விலகி பெயார்வெல் பகுதியில் 21 அடி பள்ளத்தில் இருந்த புதிதாக நிர்மாணிக்கப்படும் கட்டிடத்தில் மீது விழுந்து விபத்துக்குள்ளாகியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

10.09.2016 அன்று சனிக்கிழமை அதிகாலை 1.30 மணியளவில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக லிந்துலை போக்குவரத்து பொலிஸார் தெரிவிக்கின்றனர். சாரதியின் கவனயீனம் காரணமாகவே இவ்விபத்து நேர்ந்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

எனினும் இதில் பயணித்த உயிரிழந்தவரின் மனைவியும், பிள்ளையும் தெய்வாதீனமாக உயிர் தப்பியதோடு, சிறு காயங்களுடன் லிந்துலை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இவ்வாறு உயிரிழந்தவர் முச்சக்கரவண்டியின் சாரதியான அட்டன் பகுதியை சேர்ந்த என்.பிரஸ்டன் 29 வயது மதிக்கதக்கவர் என தெரிவிக்கப்படுகின்றது.

இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை லிந்துலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.





இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -