கல்முனையிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த லொறி விபத்து சாரதி, நடத்துனர் அவசரப்பிரிவில்

ட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள கத்தான்குடி பிரதான வீதியில் இன்று அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் காயமடைந்துள்ளனர்.

அதிகாலை ஒருமணியளவில் கல்முனையிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்துக் கொண்டிருந்த லொறியொன்று காத்தான்குடி பிரதான வீதியில் ஓடுகளை இறக்கி கொண்டிருந்த லொறியொன்றின் பின் பகுதியுடன் மோதுண்டுள்ளது.

விபத்தில் காயமடைந்த லொறி சாரதி மற்றும் நடத்துனர் ஆகிய இருவரும் காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக சாய்ந்தமருதைச் சேர்ந்த அப்துல் வஹாப்(50) மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு அங்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சம்பவம் தொடர்பான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் காத்தான்குடி பொலிசார் மேலும் தெரிவித்தனர்.
வீரகேசரி.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -