எப்.முபாரக்-
திருகோணமலையில் இரண்டு எருமை மாடுகளை அனுமதிப்பத்திரமின்றி விற்பனைக்காக கொண்டு சென்ற நபர் ஒருவருக்கு ஒரு இலட்சத்து பத்தாயிரம் ரூபாய் தண்டப்பணம் விதித்து திருகோணமலை நீதிமன்ற நீதிவான் எல்.எச்.விஸ்வானந்த பெர்ணாண்டோ நேற்று வெள்ளிக்கிழமை (9) உத்தரவிட்டார். திருகோணமலை, மொறவெவ, பகுதியைச் சேர்ந்த 42வயதுடைய ஒருவருக்கே அத்தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளது.
குறித்த நபர் கடந்த வருடம் அனுமதிப்பத்திரமின்றி மொறவெவ பகுதியிலிருந்து திருகோணமலைக்கு சிறியரக பட்டா லொறியொன்றில் இரண்டு எருமை மாடுகளை கொண்டு சென்ற போது பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டு குறித்த நபருக்கெதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. குறித்த வழக்கின் போது குற்றவாளியாக இனங்கண்டு தண்டப்பணாம் விதித்து நீதிவான் உத்தரவிட்டார்.