திருகோணமலை: அனுமதிப்பத்திரமின்றி மாடுகளை கொண்டு சென்றவருக்கு தண்டப்பணம் விதிப்பு..!

எப்.முபாரக்-
திருகோணமலையில் இரண்டு எருமை மாடுகளை அனுமதிப்பத்திரமின்றி விற்பனைக்காக கொண்டு சென்ற நபர் ஒருவருக்கு ஒரு இலட்சத்து பத்தாயிரம் ரூபாய் தண்டப்பணம் விதித்து திருகோணமலை நீதிமன்ற நீதிவான் எல்.எச்.விஸ்வானந்த பெர்ணாண்டோ நேற்று வெள்ளிக்கிழமை (9) உத்தரவிட்டார். திருகோணமலை, மொறவெவ, பகுதியைச் சேர்ந்த 42வயதுடைய ஒருவருக்கே அத்தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளது. 

குறித்த நபர் கடந்த வருடம் அனுமதிப்பத்திரமின்றி மொறவெவ பகுதியிலிருந்து திருகோணமலைக்கு சிறியரக பட்டா லொறியொன்றில் இரண்டு எருமை மாடுகளை கொண்டு சென்ற போது பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டு குறித்த நபருக்கெதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. குறித்த வழக்கின் போது குற்றவாளியாக இனங்கண்டு தண்டப்பணாம் விதித்து நீதிவான் உத்தரவிட்டார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -