யஹ்யாகான் பௌன்டேசனின் நேசக்கரம்!...

எம்.வை.அமீர்-
பிராந்தியத்தில் வசதிகள் குறைந்த பாடசாலைகள் மற்றும் நிறுவனங்களின் இலகு செயற்பாட்டுக்கும் தனிநபர்களின் அத்தியாவசிய தேவைகளான குடிநீர்,மின்சாரம்,வாழ்வாதார உதவிகள் மற்றும் பாடசாலை மாணவர்களின் கற்றல் உபகரணங்கள் வழங்குதல் புலமைப்பரிசில்கள் வழங்குதல் என பல்வேறு சமூகநல திட்டங்களை பலவருடங்களாக செயற்படுத்தி வரும் யஹ்யாகான் பௌன்டேசன், 2016-09-14 ஆம் திகதி சாய்ந்தமருதில் உள்ள அதன் காரியாலயத்தில் வைத்து, தெரிவுசெய்யப்பட்ட ஒரு தொகை பயனாளிகளுக்கு குடிநீரை பெறுவதற்கான காசோலைகளை வழங்கி வைத்தது.

யஹ்யாகான் பௌன்டேசனின் செயலாளர் ஏ.சீ.எம்.றியால் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உயர்பீட உறுப்பினரும் யஹ்யாகான் பௌன்டேசனின் தலைவரும் தொழிலதிபரும் சமூக சிந்தனையாளருமான ஏ.சி.யஹ்யாகான் கலந்துகொண்டு காசோலைகளை வழங்கிவைத்தார்.

நிகழ்வில் அல் ஹிலால் வித்தியாலய ஒழுக்காற்று ஆசிரியர் எம்.எம். வுஹாரி உள்ளிட்டவர்களும் பௌன்டேசனின் உயர் மட்ட உறுப்பினர்களும் பயனாளிகளும் கலந்துகொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -