ஐக்கிய தேசிய கட்சி நாட்டுக்கு பல வெற்றிகளை பெற்றுக்கொடுத்த கட்சியாகும் -அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல

லங்கையில் இனங்களிடையே ஐக்கியத்தை ஏற்படுத்தி தேசிய நல்லிணக்கத்திற்கு உயிர் கொடுத்தது கட்சி ஐக்கிய தேசியக் கட்சியாகும். 70ஆம் ஆண்டில் கால்பதிக்கும் ஐக்கிய தேசிய கட்சியின் நாட்டுக்கான மக்களுக்கான அர்ப்பணிப்பு தொடரும் என்று சபை முதல்வரும் அமைச்சருமான லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.

ஐக்கிய தேசிய கட்சியின் 70 ஆவது வருடாந்த பூர்த்தி மற்றும் நாளை இடம்பெறுவுள்ள சம்மேளனம் தொடர்பில் கருத்து தெரிவித்த போதே சபை முதல்வரும், உயர்க்கல்வி,நெடுஞ்சாலைகள் அமைச்சருமான லக்ஷ்மன் கிரியெல்ல இவ்வாறு தெரிவித்தார்.

அமைச்சர் இது தொடர்பாக மேலும் கருத்து தெரிவிக்கையில், ஐக்கிய தேசிய கட்சி நாட்டுக்கு பல வெற்றிகளை பெற்றுக்கொடுத்த கட்சியாகும்.

அதேவேளை 70 வருடத்தை பூர்த்தி செய்யும் எமது கட்சி, அதனை அர்த்தமுள்ளதாக கொண்டாடுகிறது.

பௌத்த மத அனுஷ்டானங்கள், இந்து, கிறிஸ்தவ, இஸ்லாமிய மத அனுஷ்டானங்களை நடத்தி மதங்களிடையே ஒற்றுமையை வலியுறுத்தியுள்ளது.

மறுபுறம் சிங்களம், தமிழ், கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர் என அனைத்து இனத்தவர்களும் ஐ.தே.கட்சியில் அங்கத்துவத்தைப் பெற்றவர்கள்.

இனங்களிடையேயும் மதங்களிடையேயும் ஒற்றுமையை ஏற்படுத்தி தேசிய நல்லிணக்கத்திற்கு உயிரோட்டம் வழங்கிய ஒரே கட்சி ஐக்கிய தேசிய கட்சியாகும் என்றார்.வீகே
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -