துமிந்த சில்வா ஜெயிலுக்குள் திருவிளையாடல் ஆடுகின்றாரா..? பேஸ்புக் சொல்கின்றது!!!... மரண தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஓர் நிலையில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவின் முகநூல் கணக்கு தொடர்ந்தும் இயங்கி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
சற்று நேரத்திற்கு முன்னதாகவும் துமிந்த சில்வாவின் முகநூல் கணக்கில் சில புகைப்படங்கள் பதிவேற்றப்பட்டுள்ளன. கடந்த ஏப்ரல் மாதம் 13ம் திகதியின் பின்னர் துமிந்தவின் முகநூல் கணக்கு இவ்வாறு செயற்பட்டுள்ளது.
முல்லேரியா துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஏற்பட்ட பாதிப்புக்கள் தொடர்பில் இவ்வாறு புகைப்படங்கள் பதிவேற்றப்பட்டுள்ளன.