தெமட்டகொட சமிந்த மஹர சிறைச்சாலைக்கு மாற்றம்...!

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பாரத லக்ஸ்மன் கொலை வழக்கில் மரண தண்டனை கைதியான தெமட்டகொட சமிந்த கண்டி போகம்பறை சிறையில் இருந்து மஹர சிறைச்சாலைக்கு இடமாற்றப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 9ஆம் திகதி வெளிக்கடை சிறைச்சாலையில் இருந்து கண்டி போகம்பறை சிறைச்சாலைக்கு தெமட்டகொட சமிந்த அழைத்துச் செல்லப்பட்டார்.

மேலும், தெமட்டகொட சமிந்தவிற்கு எதிரான வழக்குகள் பல உயர்நீதிமன்றில் விசாரணை செய்யப்பட்டு வரும் நிலையில், குறித்த வழக்குகளுக்கு சமிந்தவை ஆஜர்படுத்த வேண்டியிருப்பதாலும் போகம்பறை சிறைச்சாலையில் இருந்து சமிந்தவை அழைத்து வருவதில் காணப்படும் நடைமுறை சிக்கல்களை கவனத்திற் கொண்டும் இந்த சிறை மாற்றம் தொடர்பில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -