நிதி மோசடி தொடர்பான பொலிஸ் விசாரணைப் பிரிவினால் கைப்பற்றப்பட்ட தனது வாகனம் உரிய முறையில் தீர்வை வரியற்ற உறுதிப் பத்திரத்தின் அடிப்படையில் பெறப்பட்டது என பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
50 ஆயிரம் டொலரைக் கொடுத்தே இந்த வாகனத்தைக் கொள்வனவு செய்ததாகவும் அவர் கூறியுள்ளார்.
இந்த வாகனத்தை பாராளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு அரசினால் வழங்கப்படும் வரி விலக்கு வாகன அனுமதிப் பத்திரத்துக்கு கொள்வனவு செய்ய முடியாது எனவும் இந்த வாகனம் பெறுமதி கூடிய ஒன்று எனவும் அமைச்சரவை பேச்சாளர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ள கருத்தில் எந்தவித உண்மையும் கிடையாது எனவும் நாமல் ராஜபக்ஷ அறிவித்துள்ளார்.
இந்த வாகனம் வரிச் சட்டங்கள் எதனையும் மீறி, கொண்டுவரப்பட்ட ஒன்று அல்ல. இதனை நான் 6 வருடங்கள் பயன்படுத்தியுள்ளேன். இதன்போது எவரும் என்னை கேள்வி கேட்கவில்லையெனவும் நாமல் ராஜபக்ஷ மேலும் கூறியுள்ளார்.