ஏறாவூர் வஷிம் அக்றம்-
ஏறாவூர் இரட்டைக்கொலைகள் ஏற்படுத்தும் அதிர்வலைகள்
அது மிகவும் அதிர்ச்சியான ஒரு செய்தி...
நேற்று முன் தினம் நண்பகல் 12 மணியிலிருந்து இந்த நிமிடம் வரை அந்த துயரத்தால் மனது கனத்துக்கிடக்கிறது.!
நடு ஊருக்குள் இரண்டு பெண்கள் ஈவிரக்கமின்றி படுகொலை செய்யப்பட்டிருப்பதானது ஏறாவூரில் மாத்திரமல் முழு நாட்டிலும் பாரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. சம்பவம் நடந்ததில் இருந்து இதுவரை ஏறாவூர் நகர் பெரும் அமைதியான சூழ் நிலையில். யார் அந்தக் கொடூரக் கொலை காறன்(ர்கள்) என்ற கேள்வியில் மக்கள் உலாவுகின்றனர்.
கொலை காறனைக் கைது செய்ய மக்கள் பூரண ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் பாதுகாப்புத் துறையினர் அவர்களின் வேலையில் சிறப்பாக ஈடுபட்டுள்ளனர்.