“வான் ஒலிக்கும் இறை புகழும் தக்பீர் நாதம் வானொலிக்கும் கொண்டு வரும் கவிதை ஓடம்" எனும் தலைப்பில் ஹஜ்ஜுப் பெருநாள் விசேட கவியரங்கம் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன முஸ்லிம் சேவையில் 12-9-2016 பெருநாள் தினத்தன்று காலை 10.30 மணிக்கு ஒலிபரப்பாகும். கவிஞர் என். நஜ்முல் ஹுசைன் இக் கவியரங்கிற்கு தலைமை தாங்குகிறார். கவிஞர்கள் ரஷீத் எம். இம்தியாஸ் “ஷைத்தானுக்கு மட்டுமா கல்? " என்றும், - உக்குவெள்ள இளையநிலா பஸ்மினா அன்சார் ரிபாக் “மேனிக்கு மட்டுமா இஹ்ராம்?" என்றும், பேருவளை பரீஹா பாரூக் இம்தியாஸ் “இப்ராஹிம் நபிக்கு மட்டுமா தியாகம்? " என்றும், மாளிகாவத்தை இளநெஞ்சன் முர்ஷிதீன் “ஹஜ்ஜில் மட்டுமா ஒற்றுமை? " என்றும், புல்மோட்டை யாசிர் எம். அனிபா “உல்லாசப் பயணமா ஹஜ்? " என்றும் கவிதை பாடுகின்றனர். முஹம்மத் ரலீன் தயாரித்தளிக்கும் இக் கவியரங்கை பணிப்பாளர் அல்ஹாஜ் எஸ். முஹம்மத் ஹனீபா நெறிப்படுத்தியுள்ளார்.
நஜ்முல் ஹுசைன்.