இரட்டைக் கொலை: குற்றவாளிகளை துரிதமாக கைது செய்யவும் - இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லா

பாத்திமா நிஜா-
றாவூரில் இடம்பெற்ற இரட்டைக் கொலையுடன் சம்மந்தப்பட்ட குற்றவாளிகளை துரிதமாக கைது செய்வதற்கு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லா வேண்டுகோள்விடுத்தார்.

படுகொலை செய்யப்பட்ட தாய் மற்றும் மகளது ஜனாஸாக்கள்நேற்றிரவு (13) ஏறாவூர் காட்டுப்பள்ளி மையாவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

இந்நிகழ்வில் பங்கேற்ற இராஜாங்க அமைச்சர் ஏறாவூர் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியை சந்தித்து கலந்துரையாடிய போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

ஒரே குடும்பத்தில் இருவரை இழந்து சோகத்தில் இருக்கும் அக்குடும்பத்தினருக்கும் தனது ஆழ்ந்த அனுதாபத்தினையும் தெரிவித்தார். இதன்போது கிழக்கு மாகாண சபை உறுப்பிர் எம்.எஸ் சுபையிரும் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -