சம்பூர் அனல் மின்நிலையம் நிர்மாணிக்கப்படாது..!

ம்பூரில் அனல் மின் நிலையத்தை அமைக்க போவதில்லை என மின்சக்தி அமைச்சின் செயலாளர் கலாநிதி சுரேன் பட்டகொட தெரிவித்துள்ளார். இதுகுறித்து சட்ட மா அதிபர் இன்று உயர் நீதிமன்றத்தில் இன்று அறிவித்துள்ளார்.

சம்பூர் அனல்மின் உற்பத்தி நிலையத்திற்கு எதிராக வரையறுக்கப்பட்ட சுற்றாடல் மன்றம் தாக்கல் செய்த அடிப்படை உரிமை மனு இன்று பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இதன்போதே சட்ட மாஅதிபர் சார்பாக பிரதி சொலிசிட்டர் ஜெனரல் சஞ்சய ராஜரட்ணம் இந்த விடயம் குறித்து தெரிவித்துள்ளார்.

மின்சக்தி மற்றும் புதுப்பிக்கத்தக்கசக்தி அமைச்சின் தீர்மானம் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து இந்த மனு மீதான விசாரணை முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -