அவதானம்: கொத்மலை நீர்தேக்கத்தின் சுருங்கை திறப்பு

க.கிஷாந்தன்-
நிலவும் வரட்சி காலநிலை காரணமாக தாழ் நிலப்பகுதிகளுக்கு தேவையான நீரை வழங்குவதற்காக 14.09.2016 அன்று கொத்மலை காமினி திஸாநாயக்க நீர்தேகத்தின் மேலதிக நீரை வெளியேற்றும் சுருங்கை ஒன்று திறந்து விடப்பட்டுள்ளதாக நீர்தேக்கத்தின் பொறுப்புவாய்ந்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

குறித்த சுருங்கை திறந்து விடப்பட்டுள்ளதால் மகாவலி ஆற்றில் உலப்பனையிலிருந்து கம்பளை, கெலிஓயா, பேராதெனிய, கடுகஸ்தொட ஊடாக பொல்கொல்ல வரை பிரதேசத்தின் குளங்கள் மற்றும் ஏரிகள் ஆகியவற்றின் நீர்மட்டம் அதிகரிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இதன் காரணமாக மகாவலி ஆற்றை பயன்படுத்தும் மக்களை அவதானத்துடன் செயற்படுமாறு மகாவலி அதிகார சபை கோரியுள்ளது.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -