காத்தான்குடி குப்பையில் தங்க நகைகள்..!

காத்­தான்­குடி வீடு ஒன்றில் கொள்­ளை­யி­டப்­பட்ட 20 பவுண் நகைகள் 13 தினங்­களின் பின்னர் குறித்த வீட்­டுக்கு அருகில் குப்­பையில் வீசப்­பட்ட நிலையில் மீட்­கப்­பட்­டன. 

காத்­தான்­குடி பொலிஸ் பிரி­வி­லுள்ள புதிய காத்­தான்­குடி, பரீட் நகர் பகு­தியில் கடந்த மாதம் 29 ஆம் திகதி திங்­கட்­கி­ழமை அதி­காலை 2.30 மணி­ய­ளவில் பெண்ணை தடி­களால் தாக்­கி­விட்டு இரண்டு இலட்ச ரூபா பணம் மற்றும் 20 பவுண் தங்க நகைகள் என்­பன கொள்ளையிடப்­பட்­ட­தாக முறைப்­பாடு செய்­யப்­பட்­டி­ருந்­தது.

இச் ­சம்­பவம் தொடர்­பாக காத்­தான்­குடிப் பொலிஸார் புலன்­வி­சா­ர­ணை­களை மேற்­கொண்­டு­வந்த நிலையில் எதிர்­பா­ராத திருப்­ப­மாக கொள்ளையிடப்பட்ட நகைகள் அனைத்தும் கொள்­ளை­யி­டப்­பட்ட அதே வீட்டில் முற்றப்பகுதியில் காணப்பட்ட குப்பை மேட்டில் சனிக்­கி­ழமை மாலை வீசப்­பட்டு கிடப்பதாக தெரிவிக்கப்பட்டதையடுத்து பொலிஸார் நகைகளை மீட்டுள்ளனர்.

சம்­பவ தினம் வீட்­டி­லி­ருந்த பெண் மல­ச­ல­கூ­டத்­துக்குச் செல்ல முற்­பட்ட போது அவ­ர­து­வீட்டு வள­வுற்குள் மறைந்­தி­ருந்த நப­ரொ­ருவர் அந்தப் பெண்ணை தாக்­கி­விட்டு பணத்­தையும் நகை­க­ளையும்­ கொள்­ளை­யிட்­ட­தாக பொலிஸில் முறைப்­பாடு செய்­யப்­பட்­டி­ருந்­தது.

அதன்­பின்னர் தாக்­கு­த­லுக்­குள்­ளான பெண், காத்­தான்­குடி ஆதார வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­திக்­கப்­பட்டு சிகிச்சை பெற்­றி­ருந்தார். இதே­வேளை, காத்­தான்­குடி பொலிஸார் மீட்கப்பட்ட நகைகளை தடயவியல் பரி சோதனைக்கு உட்படுத்தியுள்ளதுடன் மேலதிக விசாரணைகளையும் மேற் கொண்டுள்ளனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -