இப்படியான தாக்குதலின் பின்னர் ஒரு வினாடி கூட உயிர் வாழமுடியாது – ஹிருணிகா

னது தந்தையின் தலையை தாக்கியிருந்த துப்பாக்கிச் சூட்டினை பார்க்கும் போது, அப்படியான தாக்குதலுக்கு இலக்காகும் ஒருவர் ஒரு வினாடிகூட உயிர்வாழ முடியாது என பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமசந்திர தெரிவித்துள்ளார்.

தனது தந்தையான பாரத லக்ஸ்மன் பிரேமசந்திரவின் தலையில் துப்பாக்கியால் சுடப்பட்டிருந்த புகைப்படத்தை தனது பேஸ்புக்கில் பதிவு செய்து இந்த கருத்தினை வெளியிட்டுள்ளார்.

அதேவேளை தான் குறித்த புகைப்படத்தை முதல் தடவையாக வெளியிடுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

” இந்த புகைப்படத்தை பார்க்கும் ஒவ்வொரு நேரமும், இது ஒரு உண்மையான புகைப்படம் இல்லை என்றே நான் நினைக்கிறேன். ஏன் என்றால் எனக்கு எப்போதும் நினைவில் இருப்பது அவரின் சிரித்த அழகான முகம் மாத்திரமே. எனது வாழ்க்கையில் முதல் தடவையாக இந்த புகைப்படத்தை வெளியிடுகிறேன். உங்கள் கருணைக்காக அல்ல. தந்தையின் தலையில் துப்பாக்கியால் எவ்வாறு சுடப்பட்டிருந்தது என்பதை இதனால் நீங்கள் தெரிந்துகொள்ள முடியும். இப்படியான தாக்குதலுக்கு பின்னர் ஒரு வினாடி கூட உயிர் வாழமுடியாது என்பதை தெரிந்துகொள்வதற்காகவே..” என புகைப்படத்தை பதிவு செய்து அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -