பயன்படுத்திய மனைவி விற்பனைக்கு : கணவரின் ஏல அறிவிப்பு

லண்டன் வேபீல்ட் பகுதியில் டெலிகாம் இன்ஜினியர் சைமன் ஓ கேன் என்பவர் தன்னுடைய மனைவி லியாண்ட்ரா என்பவரை ஈபே எனப்படும் இணையதள விற்பனை மையத்தில் விற்பனை செய்ய உள்ளதாக அறிவித்துள்ளார்.

இந்த தம்பதியினருக்கு 2 குழந்தைகள் உள்ளன. சைமனுக்கு உடல் நலம் சரியில்லாமல் இருந்த போது அவரது மனைவி லியாண்ட்ரா அவரை விழுந்து விழுந்து கவனிக்காமல் வீட்டு வேலைகளிலேயே கவனமாக இருந்துள்ளார்.

இதனால் மனவேதனை அடைந்த சைமன் ஈபே என்னும் ஆன்லைன் பொருட்கள் விற்பனை செய்யும் தளத்தில் தனது மனைவியின் புகைப்படத்தை வெளியிட்டு பயன்படுத்திய மனைவி விற்பனைக்கு என விளம்பரம் கொடுத்துள்ளார்.

மேலும், மனைவியின் தகுதிகள் என, நல்ல அழகு, சிறப்பாக சமையல் செய்வார். ஆனால் இரக்கமற்றவர், இளைஞர்கள் அவரை நன்றாக பயன்படுத்தலாம் என கூறி தனது கோபத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

இந்த விளம்பரத்தை பதிவிட்ட இரண்டே நாளில் ஒருவர் அவரது மனைவியை 65880 பவுண்ட்டுக்கு ஏலத்தில் கேட்டிருந்தனர். இந்த ஏல விவரங்களை தெரிந்து கொண்ட லியாண்ட்ரா அந்த விளம்பரத்தில், தனது அழகான போட்டோவை சைமன் போடாமல் சுமாரான போட்டோவை போட்டதற்காக அவரை துரத்தியுள்ளார். அப்போது சைமன் லியாண்டாரவிடம் அவரது அரவணைப்பை தனது இயலாமையின் போது எதிர்பார்த்ததாகவும், அது கிடைக்காததால் அப்படி செய்ததாகவும் கூறினார்.

கணவரின் எதிர்பார்ப்பை புரிந்து கொண்ட மனைவி அவரிடம் நடந்தவற்றுக்கு மன்னிப்பு கேட்டுக்கொண்டு புது வாழ்க்கையை ஆரம்பித்துள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -