அம்பாறை மாவட்ட காணிப்பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு குழு


காரைதீவு நிருபர் சகா-

ம்பாறை மாவட்ட காணிப்பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு குழுவொன்று அமைக்கப்படவேண்டும்!
அம்பாறை மாவட்ட அபிவிருத்திக்குழுக்கூட்டத்தில் வலியுறுத்து!
காரைதீவு நிருபர் சகா

அம்பாறை மாவட்டத்தில் இருக்கக்கூடிய காணி தொடர்பான பிணக்குகளைத் தீர்க்க ஒரு குழுவொன்று நியமிக்கப்படுவதவசியம்.
இவ்வாறு அம்பாறை மாவட்ட அபிவிருத்திக்குழுக்கூட்டத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது.

இக்கூட்டம் நேற்றுமுன்தினம் புதன்கிழமை அம்பாறைக்கச்சேரியில் இணைத்தலைவர்களான அமைச்சர் தயாகமகே பாராளுமன்ற உறுப்பினர்களான ஏ.கே.கோடீஸ்வரன் எம்.ஜ.எம்.மன்சூர்சிறியாணி திசாநாயக்க கிழக்குமாகாண எதிர்க்கட்சித்தலைவர் எம்.எஸ்.உதுமாலெவ்வை மாகாண தவிசாளர் ச.கலப்பதி ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.
பிரதேச செயலாளர்கள் திணைக்களத்தலைவர்கள் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் கலந்துகொண்டனர்.

அம்பாறை மாவட்டத்தில் சமகாலத்தில் முன்னெடுக்கப்பட்டுவரும் அபிவிருத்தித்திட்டங்கள் தொடர்பில் முன்னேற்ற மீளாய்வு கருத்தாடல் இடம்பெற்றது. அடுத்து துறைசார்ந்த ரீதியிலும் முன்னேற்ற மீளாய்வுக் கலந்துரையாடல் இடம்பெற்றது.

இறக்காமம் தமண எல்லை விவகாரம் தீர்க்கப்படவேண்டும். நாவிதன்வெளிப்பிரதேசத்தில் இன்னமும் மீளக்குடியமர்த்தப்படாத மக்களை மீள்குடியேற்ற நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என்ற கோரிக்கைகளும் முன்வைக்கப்பட்டன.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -