தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவங்ச இன்று (14) காலை நிதி மோசடி தொடர்பான பொலிஸ் விசாரணைப் பிரிவுக்கு அழைக்கப்பட்டுள்ளார்.
இவர் அமைச்சராக இருந்த காலத்தில், இலங்கை பொறியியலாளர் கூட்டுத்தாபனத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் வாகன பயன்பாட்டில் முறைகேடு தொடர்பில் விசாரணை மேற்கொள்ளவே இவர் இன்று அழைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, பாராளுமன்ற உறுப்பினர் லொஹான் ரத்வத்தவின் சகோதரர் சானுக ரத்வத்தவும் இன்று எப்.சி.ஐ.டி. யிற்கு அழைக்கப்பட்டுள்ளார். சி.எஸ்.என். நிறுவனத்தில் பங்கு கொள்வனவில் இடம்பெற்றதாக கூறப்படும் மோசடி தொடர்வில் விசாரணை மேற்கொள்ள இவர் இன்று அழைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.