இவ்வீதியினை புனரமைப்பு செய்து தருமாறு கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக்கிடம் பொதுமக்கள் விடுத்த வேண்டுகோளினை அடுத்து கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக் இவ்வீதிகளை 2016.09.07ஆந்திகதி நேரில்சென்று பார்வையிட்டார்.
இதன்போது இப்பிரதேச மக்களை சந்தித்து இவ்வீதிகளின் அபிவிருத்தி சம்மந்தமாக தெளிவுபடுத்திய கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக், காத்தான்குடி அப்றார் நகர், நூரானியா மாவத்தை பிரதேசங்களில் இவ்வாறான நீண்ட காலமாக புனரமைக்கப்படாத அதிகளவான வீதிகள் காணப்படுகின்றது. இவ்வீதிகள் அனைத்தையும் புனரமைப்பு செய்வதற்கு குறைந்த பட்சம் 10 கோடி ரூபாய் அளவான பாரிய நிதி தேவைப்படும். இவ்வருடத்திற்கான கிழக்கு மாகாண சபையின் நிதி ஒதுக்கீடுகள் அனைத்தும் பூரனப்படுத்தப்பட்டுள்ளதால் இவ்வருடத்தில் இவ்வீதியை புனரமைக்க முடியாவிட்டாலும் இன்ஷாஅல்லாஹ் எதிர்வரும் வருடத்திற்கான கிழக்கு மாகாண சபையின் நிதி ஒதுக்கீடுகளில் இவ்வீதிகளை உள்வாங்கி புனரமைப்பு செய்ய நடவடிக்கை மேற்கொள்வதாகவும் அல்லது வேறு ஏதேனும் திட்டங்களினூடாக இவ்வருடத்திற்குள் இவ்வீதிகளை புனரமைப்பு செய்ய முயற்சிகளை மேற்கொள்வதாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறுக் மக்களிடம் வாக்குறுதியளித்தார்.