வரவு-செலவுத் திட்ட இரண்டாம் வாசிப்பு : ஆதரவாக 162, எதிராக 55

வரவு-செலவுத் திட்ட இரண்டாம் வாசிப்பு மீது வாக்கெடுப்பு நடத்தப்படவேண்டுமென்று, மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி) தலைவரும் எதிர்க்கட்சிகளின் பிரதம கொறடாவுமான அநுர குமார திஸாநாயக்க கோரினார். 

இரண்டாம் வாசிப்பு மீதான இறுதிநாள் விவாதத்தை நிறைவுசெய்து, இன்று வெள்ளிக்கிழமை மாலை நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க உரையாற்றினார். அதன் பின்னர், சபாநாயகர் கரு ஜயசூரிய, வரவு-செலவுத் திட்டத்துக்கான அங்கிகாரத்தை கோரினார். 

இதன்போது எழுந்த அநுர குமார திஸாநாயக்க, வரவு- செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பை நிறைவேற்றுவதற்கு வாக்கெடுப்பு தேவையென்றும், பெயர் குறிப்பிட்டே வாக்கெடுப்பு நடத்தப்படவேண்டும் என்றும் கோரினார். 

இதனையடுத்து இடம்பெற்ற வாக்கெடுப்பில், வரவு- செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக 162 வாக்குகளும், எதிராக 55 வாக்குகளும் கிடைத்தன. அதனடிப்படையில், வரவு- செலவுத் திட்டம் 107 மேலதிக வாக்குகளினால் நிறைவேற்றப்பட்டது. 
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -