மட்டக்களப்பு : தாய்ப்பால் புரைக்கேறியதால் 3 நாள் குழந்தை மரணம்

எஸ்.எம்.சன்சீர்-
ட்டக்களப்பு செங்கலடி சுகாதார வைத்திய அதிகாரிப் பிரிவிலுள்ள வந்தாறுமூலையில் தாய்ப்பால் புரைக்கேறியதால் 3 நாட்களேயான குழந்தை நேற்று மரணித்துள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.

வந்தாறுமூலை, ஆலையடி வீதியைச் சேர்ந்த தவசீலன் மற்றும் சுஜாந்தினி தம்பதிகளின் ஆண் குழந்தை ஜரூக்ஸன் (வயது - 3 நாள்) என்ற குழந்தையே இவ்வாறு மரணத்தைத் தழுவியுள்ளது.

குழந்தை அழும்போது தாய் பால் அருந்தக் கொடுத்து பிள்ளையை படுக்கையில் போட்டுவிட்டு வீட்டு வேலைகள் முடிந்து வந்து பார்த்தபோது சற்று நேரத்தில் குழந்தை மரணித்து விட்டிருந்ததாக பெற்றோர் தெரிவித்தனர்.

கரடியனாறு பிரதேச வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் கே. சுகுமார் முன்னிலையில் பிரேத பரிசோதனையின் இடம்பெற்ற பின்னர் குழந்தையின் சடலம் நல்லடக்கத்திற்காக பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டதாக பிரதேச மரண விசாரணை அதிகாரி எம்.எஸ்.எம். நஸீர் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -