ஓட்டமாவடி அஹமட் இர்ஷாட்-
மட்டக்களப்பு கல்குடா தொகுதி கோறளைபற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச சபை கோறளைப்பற்று தெற்கு கிரான் பிரதேச செயலகம் ஆகிய நிருவாக பிரிவுகளுக்கு உட்பட்ட புணானை மேற்கு கிராமசேவக உத்தியோகத்தர் பிரிவில் அடங்கும் முள்ளிவட்டவான், பொத்தானை, போன்ற பிரதேசங்களில் நடுநிலையாக தாங்கள் வணங்கும் இறைவனுக்கு பயந்தவர்களாகவும், முஸ்லிம் சமூகத்திற்கு நன்றிக்கடன்பட்ட சாதாரண மனிதர்களாக முஸ்லிம்களின் பூர்வீக இருப்புக்களை உறுதிப்படுத்தும் வகையில் தமிழ் சமூகம் தெரிவித்த கருத்துக்களின் காணொளி எமது இணைய நாளிதழ் வாசகர்களுக்காக இங்கே தருக்கின்றோம்.
மேலும்.. 1990ம் ஆண்டு எமது நாட்டில் ஏற்பட்ட புரையோடிய யுத்தத்தின் இன அழிப்பின் ஓர் அங்கமாக மட்டக்களப்பு கல்குடா தொகுதி பொத்தானை, முள்ளிவட்டவான் கிராமங்களில் வாழ்ந்த முஸ்லிம்களின் வாழ் விடங்களை அடையாளப்படுத்தி எதிர் கால தமிழ் மற்றும் முஸ்லிம் சமூகத்தின் ஒற்றுமையினை மீள் கட்டியெழுப்பும் நோக்குடனும், பாதிக்கப்பட்ட அப்பாவி முஸ்லிம்களின் இருப்புக்களை மீள் உறுதிப்படுத்துவதற்காகவும் அரசியல் மற்றும் படித்த புத்தி ஜீவிகள் முன்னின்று பக்கசார்பற்ற நிரந்தர தீர்வினை பெற்றுக்கொடுப்பது காலத்தின் கட்டாய தேவை என்பதை இங்கே பதிவேற்றியுள்ள காணொளி சான்று பகிர்கின்றது.