நெஞ்சில் ஓர் முள் இனிமேலும் வேண்டாம் ஓர் போராட்டம்..!

நெஞ்சில்_ஓர்_முள்
இனிமேலும்_வேண்டாம்_ஓர்போராட்டம்.

எங்கள் மரணத்தை கண்டு 
கண்கலங்கியவர்களுக்கு
வணங்குகிறோம்...

சொல்லுங்கள் எங்கள் சந்ததியினருக்கு 
நாங்கள் பயங்கரவாதியில்லையென
ஆயுதம் தாங்கிய அண்ணா மார்கள் 
எம்மை கொன்று குவித்துள்ளனர்...

ஆறடி நிலத்தை ஆழ்வதற்காவா
அண்ணாக்கள் எம்மை அழித்தார்கள் என்று
வளர்ந்தவுடன் கேட்கும் என் 
உறவுகளுக்கு சொல்லுங்கள்

வயிற்றில் பசியும்
கண்களில் பயமும்
இதயத்தில் லட்சியமுடனும்
துப்பாக்கி சூட்டுக்கு ஒழிந்து 
ஓலைக்குடிசையில் ஒடுங்கி கிடந்த எம்மை 
ஓட ஓட சுட்டுத்தள்ளினது
ஒரு இரக்கமற்ற அரக்க அண்ணாக்கள் தான் 
என்று சொல்லுங்கள்...

தூப்பாக்கி சுமந்த அண்ணா மார்கள்
எம்மை துப்பற்றவர்களாக்கி
பயங்கரவாதம் என்ற பெயரில் 
பல கற்பை சூரையாடிய
சூத்திர தாரிகள் என சொல்லுங்கள்...

அவர்கள் காம பசிக்கு இரையாகி
இன்னோர் தங்கைக்கு
இன்னிலை வேண்டாம் - என்
இமைகளை இறுக மூடிக்கொண்டு 
இறைவனடி செல்கிறோம் 

இனியாவது யுத்தம் அற்ற பூமியில் வாழுங்கள் 
இறப்பதற்கும் இழப்பதற்கும் இனிமேல் ஏதுமில்லை 
என்று அய்னாவிடமும் மதகுருக்களிடமும்
ஆயுதம் தாங்கிய அண்ணா மார்களிடமும்
உலக தலைவர்களிடமும் சொல்லுங்கள்.....

அவர்கள் தங்கை தம்பிகளுக்கு இருக்கும் 
ஆசைகள்தானே எமக்கும் இருக்கிறது 
அவர்கள் படிக்க ஆசைப்படுவது போலத்தான் 
நாங்களும் ஆசைப்பட்டோம் 
பின்னர் எதற்கு எம்மை
கொன்று குவித்தார்கள் என்று 
கேளுங்கள்...

நாங்களும் அவர்களைப்போல்
ஆசையுடன் வாழ வந்தவர்கள் தானே...
ஆனால் எங்களை 
பத்து மாதம் பாசமுடன் சுமந்த அன்புத் தாய் 
ஓடாக தேய்ந்து உழைத்து வளர்த்த
ஒட்டிய வயிறோடு இருக்கும் 
எங்கள் அன்பு தந்தை இன்னும் 
அனாதையாக்கப்பட்ட அப்பாவி 
குழந்தைகள் எல்லோரையும்
விட்டு நிறைவேறாத ஆசைகளுடன் செல்கிறோம் 
இனியாவது யுத்தம் சாதி
சமயம் பார்த்து மிஞ்சிய 
உயிர் களையும் கொன்று விடாதீர்கள்...

எங்களுடன் முடியட்டும் 
எந்த உயிர்களும் இனிமேல் பழியாக வேண்டாம் 
எங்க எஞ்சிய
உறவுகள் வாழ நாங்கள் எச்சங்களாகுகிறோம்...

ஆழ்வோரே...
எம் இனத்தின்
சுய நல அரசியல் தலைகளே...
இனிமேலும்
புத்தமதம் இஸ்லாம் மதம்
இந்துமதம் க்ரிஸ்டின்மதம் என்றில்லாமல் 
ஒரே இரத்தம் என உலகறிய சொல்லுங்கள்...

ரத்தங்களால் மூழ்கடிக்கப்பட்ட
வடகிழக்கு சாம்ராஜ்யம் 
அரசியல் லாபத்திற்காக 
அழிக்கப்படும் அப்பாவி உயிர்களின்
அன்பு சாம்ராஜ்யம்...

மத வெறியை தூண்டும் 
மனித மிருகங்கள்
மானிட இதயத்தில் பயங்கரவாதிகள் எனும் 
மாயத்தை தூவி எமக்கு மயாப்பாதை காட்டும் 
மனிதர்களுக்கு சொல்லுங்கள்

உங்கள் மதவெறிக்குள்
மாண்டது மரங்கள் அல்ல
எங்கள் வயிற்றில் சுமந்த கருக்கள் என்று 
மனித நேயம் இனியாவது 
மலரட்டும் என்று...

விலை போன வரட்டு கர்வத்தால்
நாதியற்றுப்போனது சிறுபான்மை
சமூகம் 
பதவி மோகத்தால் காட்டிக் கொடுக்கும் 
கல் நெஞ்சங்கள்

சமாதியாகிப்போன அப்பாவி
தமிழ் முஸ்லிம் சிங்கள மக்களின் சரித்திரம் 
சூரையாடப்பட்ட கன்னிகளின் 
கண்ணீர் காவியம்

என்றும் மறக்க முடியாத 
பொன் எழுத்துக்களால்
பதியப்படவேண்டிய பொல்லாத 
ரணங்கள்... 

சிறுபான்மை எனும் பெயரால் 
சித்திரவதை செய்யப்படும்
அடக்குமுறை 
வலியும் ரணமும்
பசியும் தாகமும்
பயமும் தவிப்பும்
கற்பும் வாழ்வும் 
உயிரும் உடமையும்
சிதைந்து போன
சித்திரங்கள் மாங்காத 
சரித்திரங்கள்...

என்று என் தலைமுறைக்கு
சொல்லுங்கள்....
மாண்டது மரங்கள் அல்ல
இலங்கை மண் சுமந்த உயிர்கள் தான் என்று....
உலகறிய சொல்லுங்கள்....

எழுதுங்கள் எங்கள் கல்லறையில்
ஓர் புதிய வரலாற்றை 
யுத்தமற்ற இன மத வேறுபாடில்லா 
புதிய பூமி இலங்கை நாடு என்று....

அன்புடன் கவிப்பிரியன்...
ஆதில்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -