அமைச்சா் விஜயதாசவின் கருத்தை வன்மையான கண்டித்து நாளை எம்.பிக்களின் கூட்டத்தில் மரிக்காா் குரல்..!

அஷ்ரப் ஏ சமத்-
நேற்று முன்தினம் பாராளுமன்ற வரவு செலவு விவாதத்தின் போது நீதி மற்றும் பௌத்த சாசன அமைச்சா் விஜயதாச ராஜபக்ச - இலங்கையில் உள்ள முஸ்லீம்கள் 32பேர் ஜ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாத இயக்கத்தில் உள்ளதாக உயா் மன்றமான பாராளுமன்றத்திலேயே கருத்து தெரிவித்துள்ளாா். இவரின் உரை சம்பந்தமாக நாளை (21) பாராளுமன்றத்தில் நடைபெறவுள்ள அரச குழுக் கூட்டத்தின்போது பிரதமா் ரணில் விக்கிரமசிங்கவிடம் நீதியமைச்சரின் இவ் கருத்து சம்பந்தமாக நான் கேள்வி எழுப்பவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பிணா் எஸ்.எம். மரிக்காா் தெரிவித்தாா். 

அவா் தொடர்ந்தும் தகவல் தருகையில் -

அமைச்சா் விஜயதாச ராஜபக்ச தெற்கில் உள்ள சில தீவிர போக்குடைய பிக்குகளுக்கு தீனி போடுவதாகவே இவரது இக் கருத்து அமைந்துள்ளது.. இந்த நல்லாட்சி அரசினை ஏற்படுத்துவதற்கு சிங்கள மக்களோடு 95 வீதமான தமிழ், முஸ்லீம் மக்கள் வாக்களித்து ஆட்சி மாற்றத்தினை ஏற்படுத்தினாா்கள். நாட்டில் நடைபெற்ற கொடிய 30 வருட பயங்கரவாதத்தினை அழித்துக் காட்டிய பாதுகாப்புப்படையினா்கள் புலநாய்வு தகவல்களை விட நீதி அமைச்சருக்கு எவ்வாறு எங்கிருந்து அவா் இந்தத் தகவளை பெற்றாா். என்பதனை கேட்க விரும்புகின்றேன். 

அமைச்சா் விஜயதாச ராஜபக்ச கடுவளை, கொட்டாவை, மகரகம வாழ் பௌத்த மக்களது வாக்குகளை பெற்றவா் அவா்களை திருப்திப்படுத்துவதற்காக இவ்வாறு ஒரு இனத்தினை பற்றி பேசினாரா? அல்லது தீவிர போக்குடைய பௌத்த குருமாா்களது நிகழ்ச்சி நிரலில் இருந்து செயற்படுகின்றாரா ? என்பது தெரியவில்லை. இவர் இதற்குரிய சரியான தகுந்த ஆதாரங்களை நாட்டு மக்களுக்கு விரிவாக தெரிவிக்க வேண்டும்.

கடந்த வாரமாக மீண்டும் முன்னைய ஆட்சியில் தாங்களே பொலிஸ்காரா் போன்று மகிந்த ராஜபக்சவின் செல்லப் பிள்ளைகளாக இருந்த சில பொளத்த குருக்கள் இனங்களிடையே மீண்டும் குரோதத்தை ஏற்படுத்த முயற்சிக்கின்றனா். இவா்களும் கூட்டு எதிா்கட்சியின் நிகழ்ச்சி நிரலுக்கு அமைவாக இயங்குகின்றனா். 

நேற்று இரவு பெப்லியானவில் நடைபெற்ற ”பெசன் பக்” நிறுவனத்தில் களஞ்சியசாலை எரிப்பில் அங்கு பொலிசாா் நடந்து கொண்ட விதம், அத்துடன் அங்குள்ள ஊழியா் ஒருவரை அவா்கள் தாக்கிய சம்பவம் பற்றி உரிய விசாரனை மேற்கொள்ள வேண்டும். இதுவும் முஸ்லீம்களது வா்த்தக நடவடிக்கையை நசுக்க சதித்திட்டம் தீட்டப்பட்டதா என்பதையும் உடன் பொலிசாா் கண்டறிந்து இதில் சம்பந்தப்பட்டவா்களை சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும். எனவும் பாராளுமன்ற உறுப்பிணா் மரிக்காா் தெரிவித்தாா்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -