இனவாதிகளின் ஆசான் நமல் ராஜபக்ச..?வெளியாகும் பாராளுமன்ற தகவல்

இலங்கையில் இனவாதம் தூண்டும் செயற்பாடுகளுக்கு பின்னணியில் நாமல் ராஜபக்ச இருப்பதாக அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்தார். நேற்றைய தினம் பாராளுமன்றத்தில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் கூறினார்.

தொடர்ந்தும் அவர் அங்கு கருத்து தெரிவிக்கையில்,

இலங்கையில் இனவாத செயற்பாடுகள் வேகமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. அண்மைக்காலமாக முஸ்லிம் மக்கள் நாட்டில் வாழ முடியாது என அச்சுறுத்தல் விடப்பட்டு வருகின்றது.

இனவாதச் செயற்பாடுகளை தூண்டிவிட்டு அதன் மூலம் நாட்டை குழப்பவும், சர்வதேசத்தில் இலங்கைக்கு இருக்கும் நற்யெரை கெடுக்கவும் சில சதியாளர்கள் முயற்சி செய்கின்றனர். அவர்களுக்கு எதிராக நடவடிக்கைகள் எடுக்கப்படும். அதேபோன்று, ஒற்றுமையாக வாழ்ந்து வந்த சிங்கள மற்றும் முஸ்லிம் மக்களிடையே மோதலை ஏற்படுத்த முயற்சி செய்த நீலப்படையில் இருக்கும் நாமல் ராஜபக்சவிற்கு வேண்டப்பட்டவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இலங்கையில் கட்டி எழுப்பப்பட்ட நல்லிணக்கத்திற்கு எந்த ஒரு அவதூறும் ஏற்படாத வகையில் நாம் நடவடிக்கை எடுப்போம் எனவும் மங்கள சமரவீர தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -