இஸ்ரேலின் செயற்கைக்கோள் ஆமோஸ் 6 கடந்த செவ்வாய்க் கிழமை மாலை வெடித்தமையை அடுத்து பரவிய பாரிய தீ, வரலாற்று ரீதியில் பாலஸ்தீனத்துக்கு சொந்தமான, யூதர்கள் சட்ட விரோதமாக குடியேற்றப்பட்ட நகரான “ஹீபாவில்” இல் பாரிய அளவில் பரவி வருவதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
வறண்ட வானிலை மற்றும் பலத்த காற்றின் காரணமாக எதிர்பார்க்காத அளவுக்கு பரவிய குறித்த கொடூர தீயை அணைக்க முடியாமையினால், 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சட்ட விரோத குடியேற்ற வாசிகளை அங்கிருந்து அகற்ற வேண்டிய நிலை அதிகாரிகளுக்கு ஏற்பட்டுள்ளது.
மறுபுறத்தில் பாரிய அளவில் பரவி வரும் தீ தொடர்ப்பிலான செய்திகள் சமூக வலைத்தளங்களில் பாரிய வரவேற்பைப் பெற்று வருவதை காணமுடிகிறது.
இந்நிலையில் பயங்கரவாதிகள் என அவர்கள் கூறிக் கொள்பவர்களின் மீது இதற்கான பலியை சுமத்தியுள்ள யூத தீவிரவாதிகளும், இஸ்ரேலிய அரசும் அவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளனர். அதேவேளை இந்த தீ விபத்தைத் தொடர்ந்து சந்தேகத்தின் பேரில் பலர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.