எப்.முபாரக்-
திருகோணமலை துறைமுகப் பொலிஸ் பிரிவில் கடற்படையினரின் உழவு இயந்திரம் இன்று வெள்ளிக்கிழமை (11) காலை குடைசாய்ந்ததில் 04 பேர் படுகாயமடைந்த நிலையில் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இவ்விபத்தை அடுத்து உழவு இயந்திரச் சாரதியைக் கைதுசெய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கிண்ணியா உப்பாறுக் கடற்படை முகாமிலிருந்து திருகோணமலை தலைமையக முகாமுக்கு பயணித்துக்கொண்டிருந்தபோதே இவ்விபத்துச் சம்பவித்துள்ளது.
இவ்விபத்தில் அதே முகாமில் கடமையாற்றும் வை.ஜி.ஜி.எஸ்.பண்டார (26 வயது), ஏ.என்.எம்.பீ.சில்வா (20 வயது), ஜி.ஏ.எஸ்.உபசேன (27 வயது) மற்றும் எஸ்.எம்.ஜெயரெட்ண (27 வயது) ஆகியோர் படுகாயமடைந்துள்ளதாகவும் தெரியவருகின்றது.
சம்பவம் தொடர்பான விசாரணைகளை துறைமுக பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.