ஒலுவில் அல் மதீனா வித்தியாலயத்தில் வாசிப்பு விழிப்புணர்வு செயற்றிட்டம் முன்னெடுப்பு.!

அபு அலா - 
சுடர் ஒளி பத்திரிகையின் 15 வது ஆண்டு நிறைவையொட்டி வாசிப்பு விழிப்புணர்வு செயற்றிட்டம் இன்று (22) செவ்வாய்க்கிழமை அம்பாறை மாவட்ட ஒலுவில் பிரதேச அல் மதீனா வித்தியாலயத்தில் இடம்பெற்றது.

சுடர் ஒளி பத்திரிகையின் மீனோடைக்கட்டு நிருபர் பைஷல் இஸ்மாயில் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கிழக்கு மாகாண ஆயுர்வேத சிற்றூழியர் ஒன்றியத்தின் உப தலைவர் மருந்தாளர் ஏ.எல்.மனார் கலந்துகொண்டு சிறப்பித்தார்.

மேலும் கவிஞர் பாலமுனை பாறூக், எழுகவி ஜெலீல், ஆசிரியர் அன்வர் நௌஷாட் உள்ளிட்ட பலர் இதில் கலந்துகொண்டு சுடர் ஒளி பத்திரிகையின் 15 வது ஆண்டு நிறைவையொட்டிய வாசிப்பு விழிப்புணர்வு செயற்றிட்ட பதாகைகள், ஒளி அரசி புத்தகங்கள் மற்றும் தரம் இரண்டு மாணவர்களுக்கான செயல் நூல் புத்தகங்கள் போன்றவற்றை பாடசாலையின் அதிபர் கே.எல்.அமீர் மற்றும் ஆசிரியர்களான எஸ்.சகுபானா, எம்.ஏ.மஸ்றுபா ஆகியோர்களிடம் கையளித்து வைத்தனர்.

இந்த நிகழ்வுகளை தேசிய ரீதியாகவுள்ள பாடசாலைகளில் இடம்பெற்று வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.




இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -