கிழக்கு முதலமைச்சரின் அவசர அறிவித்தல்:

காலநிலை மாற்றத்தின் காரணமாக ஏற்பட்டுள்ள  மழை வெள்ள அனர்த்தங்கள் ஏற்பட்டால்  சகல உள்ளூராட்சி மன்றங்களும் 24 மணிநேர ஊழியர்களை தயார் நிலையில் வைத்துக்கொள்ளுமாறும் வெள்ள அனர்த்தங்கள் ஏற்படும்போது.. உடனடியாக வெள்ளம் வடிந்தோடவும் பொதுமக்களுக்கான சேவைகள் வழங்கவும் சகல ஏற்பாடுகளுடனும் ஆயத்தநிலையில் இருக்குமாறும் முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் பணிப்புரைக்கமைய முதலமைச்சின் செயலாளர் யூ.எல்.ஏ.அஸீஸ் சற்று முன்னர் அனைத்து உள்ளூராட்சி மன்றங்களின் செயலாளர்களுக்கும் உத்தரவிட்டுள்ளார். 

அத்துடன் அசெளகரியங்களுக்குள்ளாகும் பொதுமக்களுக்கான சேவைகள் செய்யத்தவறும் உள்ளூராட்சி மன்றங்கள் தொடர்பிலும் முதலமைச்சருக்கு தகவல் வழங்க முடியும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -