”தேசிய கீதம் தமிழ் மொழியில் பாடப்பட்டதற்கு உயர்நீதிமன்றம் அனுமதி”

தேசிய கீதம் தமிழ் மொழியில் பாடப்பட்டதற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டிருந்த அடிப்படை மனித உரிமை மீறல் மனு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படாமலேயே உயர்நீதிமன்றத்தினால் நிராகரிக்க ப்பட்டுள்ளது. அரசியலமைப்பின் படி இலங்கை தேசிய கீதம் தமிழ் மொழியிலும் பாடுவதற்கான உரிமை அளிக்கப்பட்டுள்ளதாக உயர்நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது.

இலங்கையின் 68வது சுதந்திர தின நிகழ்வின் போது அரசாங்கம் தமிழ்மொழியில் தேசிய கீதத்தை இசைப்பதற்கு எடுத்த நடவடிக்கை சட்டவிரோதமானது எனத் தெரிவித்து உயர்நீதிமன்றில் அடிப்படை உரிமை மீறல் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. 

கம்பஹா மாவட்டத்தின் களனி பிரதேசத்தைச் சேர்ந்த ஐந்து பேரினால் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்கு மீதான விசாரணை இன்று வெள்ளிக்கிழமை நடைபெறவிருந்த நிலையில், சட்டமா அதிபரின் வியாக்கியானத்திற்கு அமைய இந்த மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளாமலேயே நிராகரிப்பதாக உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -