காரைதீவு பிரதேசத்தில் வீதியோரத்தில் விளம்பரப்பலகை நாட்டுவதற்காக நிலத்தை தோண்டியபோது கைக்குண்டு ஒன்றை நேற்று முன் தினம் (22) மீட்டுள்ளதாக சம்மாந்துறை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த பிரதேசத்திலுள்ள கந்தசாமி கோவில் வீதி 2 ஆம் குறுக்கு வீதியில் வீதி புனரமைக்கப்பட்டமை தொடர்பான விளம்பர பலவகை நாட்டுவதற்காக வீதியோரத்தை தோண்டியபோது நிலத்தில் இருந்து கைக்குண்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் சம்மாந்துறை பொலிஸாருக்கு தெரிவித்ததையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் மீட்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக பொத்துவில் அறுகம்பையிலுள்ள குண்டு மீட்கும் விசேட அதிரடிப்படையினரை வரவழைக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பாக சம்மாந்துறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற் கொண்டுவருகின்றனர்.