காரைதீவில் கைக்குண்டு மீட்பு - பொத்துவில் STF படை விரைவு

காரைதீவு பிரதேசத்தில் வீதியோரத்தில் விளம்பரப்பலகை நாட்டுவதற்காக நிலத்தை தோண்டியபோது கைக்குண்டு ஒன்றை நேற்று முன் தினம் (22) மீட்டுள்ளதாக சம்மாந்துறை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த பிரதேசத்திலுள்ள கந்தசாமி கோவில் வீதி 2 ஆம் குறுக்கு வீதியில் வீதி புனரமைக்கப்பட்டமை தொடர்பான விளம்பர பலவகை நாட்டுவதற்காக வீதியோரத்தை தோண்டியபோது நிலத்தில் இருந்து கைக்குண்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் சம்மாந்துறை பொலிஸாருக்கு தெரிவித்ததையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் மீட்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக பொத்துவில் அறுகம்பையிலுள்ள குண்டு மீட்கும் விசேட அதிரடிப்படையினரை வரவழைக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பாக சம்மாந்துறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற் கொண்டுவருகின்றனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -