02ஆம் திகதி மீண்டும் கூடுகிறது SLMCயின் உயர்பீடக்கூட்டம்

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உயர்பீடக்கூட்டம் எதிர்வரும் திங்கட்கிழமை மாலை 6.30மணிக்கு கட்சியின் தலைமையகமான தாருஸ்ஸலாத்தில் நடைபெறவுள்ளது. இதன்போது கட்சியின் உத்தியோகபூர்வ செயலாளர் விவகாரம் தொடர்பில் தீர்க்கமான முடிவுக்குவரவுள்ளனர்.

மேலும் அக்கூட்டத்தில் கட்சியின் செயலாளர் நாயகம் எம்.சி.ஹஸனலியும்கலந்துகொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது. அதன்போது கட்சியின் பேராளர் மாநாடு தொடர்பில் ஆராயப்படவுள்ளதுடன் மாநாட்டை நடத்தும்திகதி மற்றும் இடமும் தீர்மானிக்கப்படவுள்ளன. மேலும் பேராளர் மாநாட்டில் முன்வைக்கவுள்ளயாப்புத் திருத்தம் தொடர்பிலும் அவதானம் செலுத்தப்படவுள்ளதுடன் இதன் போது தேசியப்பட்டியல் விவகாரம் பற்றி ஆராய்ப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. 
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -