ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உயர்பீடக்கூட்டம் எதிர்வரும் திங்கட்கிழமை மாலை 6.30மணிக்கு கட்சியின் தலைமையகமான தாருஸ்ஸலாத்தில் நடைபெறவுள்ளது. இதன்போது கட்சியின் உத்தியோகபூர்வ செயலாளர் விவகாரம் தொடர்பில் தீர்க்கமான முடிவுக்குவரவுள்ளனர்.
மேலும் அக்கூட்டத்தில் கட்சியின் செயலாளர் நாயகம் எம்.சி.ஹஸனலியும்கலந்துகொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது. அதன்போது கட்சியின் பேராளர் மாநாடு தொடர்பில் ஆராயப்படவுள்ளதுடன் மாநாட்டை நடத்தும்திகதி மற்றும் இடமும் தீர்மானிக்கப்படவுள்ளன. மேலும் பேராளர் மாநாட்டில் முன்வைக்கவுள்ளயாப்புத் திருத்தம் தொடர்பிலும் அவதானம் செலுத்தப்படவுள்ளதுடன் இதன் போது தேசியப்பட்டியல் விவகாரம் பற்றி ஆராய்ப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.