வெளியானது 2017 இல் மஹிந்த ராஜபக்ஷவின் திட்டம்..!

2017 ஆம் ஆண்டில் இந்த அரசை வீழ்த்துவதே தனது இலக்கு என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். வெளிநாட்டு ஊடகவியலாளர்கள் சங்கத்துடனான சந்திப்பின்போதே முன்னாள் ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றில் அரசாங்கத்துக்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை ஆதரவு காணப்பட்டாலும், எதிர்காலத்தில் அந்த நிலைமை மாறக்கூடும் என முன்னாள் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

இதேவேளை தான் மேற்கொண்ட அபிவிருத்திகளை, ரணில் விக்ரமசிங்க வெளிநாடுகளுக்கு விற்பனை செய்து வருகிறார். இதனையே அரசாங்கம் பொருளாதாரக் கொள்கையாகக் கொண்டுள்ளதாகவும் மஹிந்த ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார்.

குறித்த சந்திப்பின் போது வெளிநாட்டு ஊடகவியலாளர்களுக்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அப்பம் வழங்கி உபசரித்தமை குறிப்பிடத்தக்கது. 
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -