தங்கம் இன்று ஒரே நாளில் அதிரடியாக பவுனுக்கு ரூ.216 குறைந்தது

சென்னை: ஐரோப்பிய யூனியனில் இருந்து இங்கிலாந்து விலகியதை தொடர்ந்து தங்கம் விலை அதிரடியாக உயர்ந்து பவுன் ரூ.23 ஆயிரத்தை தொட்டது. பின்னர் படிப்படியாக குறைந்து ரூ.22 ஆயிரத்தை நெருங்கியது.

இதற்கிடையே ரு.500 மற்றும் ரூ.1000 நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து மீண்டும் தங்கம் விலை உயர்ந்தது. பவுன் விலை ரூ.23 ஆயிரத்தை நெருங்கியது.

இந்த நிலையில் கடந்த நவம்பர் மாதம் 28-ந்தேதி தங்கம் விலை பவுன் ரூ.22 ஆயிரத்து 576 ஆக இருந்தது. பின்னர் படிப்படியாக குறைந்தது. 2-ந்தேதி ரூ.22 ஆயிரத்து 96-க்கு விற்றது.

இன்று ஒரே நாளில் அதிரடியாக பவுனுக்கு ரூ.216 குறைந்தது. ஒரு பவுன் ரூ.21 ஆயிரத்து 880 ஆக இருந்தது. கிராமுக்கு ரு.27 குறைந்துள்ளது. ஒரு கிராம் ரூ.2,735-க்கு விற்கிறது.

பங்குசந்தையில் முதலீடு அதிகரிப்பு மற்றும் சர்வதேச சந்தை விலை சரிவு உள்ளிட்ட காரணங்களால் தங்கம் விலை குறைந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

வெள்ளி ஒரு கிலோ ரூ.41 ஆயிரத்து 55 ஆக உள்ளது. ஒரு கிராம் ரூ.43.90க்கு விற்கப்படுகிறது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -