30ம் திகதி தேசிய துக்க தினம் இல்லை.!

லங்கையின் முன்னாள் பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்கவின் இறுதிச் சடங்கு இடம்பெறவுள்ள டிசெம்பர் 30ஆம் திகதி, அவரது உறவினர்களின் கோரிக்கைகளுக்கு அமைய தேசிய துக்க தினமாக அனுஷ்டிக்கப்படமாட்டது என உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் வஜிர அபயகுணவர்த்தன தெரிவித்துள்ளார்.

இலங்கையின் முன்னாள் பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்கவின் இறுதிச் சடங்கு இடம்பெறவுள்ள டிசெம்பர் 30ஆம் திகதியை, தேசிய துக்க தினமாக, உள்நாட்டு அலுவல்கள் அமைச்சு அமுல்படுத்தியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, அன்னாருடைய இறுதிக் கிரியைகள் ஹொரணை விளையாட்டு மைதானத்தில் பூரண அரச அனுசரனையுடன் இடம்பெறும். 

ரட்ணசிறி விக்ரமநாயக்க 2000 -2001 ஆண்டு மற்றும் 2005 - 2010 ஆண்டுகளில் இலங்கையின் பிரதமராக தெரிவுசெய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -