எனக்கு தேசியப்பட்டியல் வழங்கினால் அட்டாளைச்சேனை பள்ளிக்கு 50 இலட்சம் கொடுப்பேன் -இக்பால்

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸினால் அட்டாளைச்சேனைக்கு வழங்கப்படவிருக்கின்ற தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை போராளிகளும்,ஆதரவாளர்களும் இணைந்து எனக்குப் பெற்றுத் தருவீர்களேயானால் அட்டாளைச்சேனைப் பெரிய மள்ளி பரிபாலன சபைக்கு ரூபா.50 லட்சம் என்னால் அன்பளிப்பாக வழங்கப்படும்.
என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அட்டாளைச்சேனை ஆதரவாளரும் மத்திய குழு உறுப்பினரும், முன்னாள் இளைஞர் காங்கிரஸ் அமைப்பாளருமான பி.ரி.இக்பால் ஆசிரியர் அவருடைய முகநூலில் பதிவிட்டுள்ளார்.

இது தொடர்பில் இம்போட்மிரர் செய்திப் பிரிவு அவரைத் தொடர்பு கொண்டு கேட்டபோது.. இவ்வாறு பதிலளித்தார்:
அட்டாளைச்சேனைக்கான தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராகச் செல்லும் தகுதி என்னிடமும் உள்ளது. அதுபோன்று தேசியப்பட்டியலை தலைவரிடம் எனக்காகக் கேட்கும் தகுதியும் என்னிடம் உள்ளது. எனவே எனக்கு அதனைக் கொடுத்தால் அரசியல் செய்வது எவ்வாறு என்று அனைவருக்கும் முன்னால் செய்து காட்டுவேன் என்று இம்போட்மிரருக்குத் தெரிவித்தார் இக்பால்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -