”தென்கிழக்கு பல்கலையில் 5 வது வருடாந்த விஞ்ஞான ஆய்வரங்கு” (படங்கள்)

எம்.வை.அமீர் -
தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் பிரயோக விஞ்ஞான பீடத்தினால் 5 வது தடவையாக நடத்தப்பட்ட வருடாந்த விஞ்ஞான ஆய்வரங்கு, பிரயோக விஞ்ஞான பீட கேட்போர் கூடத்தில் 2016-12-29 ஆம் திகதி பீடாதிபதி கலாநிதி யு.எல்.செயினூடீன் தலைமையில் இடம்பெற்றது.

நிகழ்வுக்கு பிரதம அதிதியாக தென்கிழக்கு பல்கலையின் உபவேந்தர் பேராசிரியர் எம்.எம்.எம்.நாஜீம் அவர்கள் கலந்துகொண்டிருந்தார். 5 வது வருடாந்த விஞ்ஞான ஆய்வரங்குக்கு பிரதம பேச்சாளராக கொலம்பிய பல்கலைக்கழக காலநிலைகள் தொடர்பான விஞ்ஞானி கலாநிதி லரீப் சுபைர் அவர்கள் பங்குகொண்டு உரையாற்றினார். 2016 ASRSஏற்பாட்டாளரான கலாநிதி அபூபக்கர் ஜெளபர் வரவேற்புரையையும் நிகழ்வின் செயலாளரான வி.சுஜாராணி நன்றியுரையும் நிகழ்த்தினார்.

பிரதம அதிதியாக கலந்து சிறப்புரையாற்றியா உபவேந்தர் எம்.எம்.எம்.நாஜீம்;

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் இந்த டிசம்பர் மாதத்தில் மட்டும் இதுவரை நான்கு ஆய்வரங்குகளில் பன்குகொண்டுள்ளதாகவும் இந்த ஆய்வரங்கு முடிந்த கையோடு கலை மற்றும் கலாச்சார பீடத்தின் ஆய்வரங்கு ஒன்றுக்குச் செல்லவுள்ளதாகவும் தெரிவித்த பேராசிரியர் நாஜீம், அதிகரித்துள்ள இவ்வாறான ஆய்வரங்குகள் , ஆய்வுகள் மற்றும் வெளியீகளின் காரணமாக தேசத்தின் முன்னேற்றத்தில் இப்பல்கலைக்கழகமும் மிகுந்த கரிசனை காட்டுவதை எடுத்துக்காட்டுவதாகவும் தெரிவித்தார்.

கிழக்கு மாகாணத்தில் தென்கிழக்குப் பல்கலைக்கழகமானது ஆய்வுகள் விடயத்தில் முன்னிலை வகிப்பதனூடாக நாட்டின் அபிவிருத்திக்கு பெரிதும் உதவுவதாகவும் தெரிவித்தார்.

பிரயோக விஞ்ஞான பீடதிபதி கலாநிதி யு.எல்.செயினூடீன் விடுத்துள்ள ஆய்வுமையம் தொடர்பான கோரிக்கையை உடனடியாக செயட்படுத்தமுடியும் எனத்தெரிவித்த உபவேந்தர், இதனோடுமட்டும் நின்றுவிடாது பிரயோக விஞ்ஞான பீடமானது 2017 ஆம் ஆண்டில் ஆராச்சி தொடர்பான பட்டப்படிப்புகள் அதாவது MSC மற்றும் PHD பாடநெறிகளை ஆரம்பிக்கமுடியும் என்றும், அதற்கான வேலைத்திட்டங்களை தயாரித்து வழங்கினால் தான் முழு ஒத்துழைப்பு வழங்கவுள்ளதாகவும் தெரிவித்தார். அத்துடன் பிரயோக விஞ்ஞான பீடத்தினூடாக டிப்ளோமா மற்றும் சேர்டிபிகேட் பாடநெறிகளையும் ஆரம்பிக்க முடியும் என்றும் தெரிவித்தார்.

தென்கிழக்கு பல்கலையில் 5 வது வருடாந்த விஞ்ஞான ஆய்வரங்குக்கு 36 ஆய்வுக்கட்டுரைகள் சமர்ப்பிக்கப்பட்டு விவாதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.








இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -