பொதுபல சேனாவின் இரகசியத்தை வெளிட்டார் மஹிந்த..!

பொதுபல சேனா அமைப்பை ஆரம்பித்தது ஜாதிக ஹெல உறுமயவின் செயலாளர் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பில் நேற்றைய தினம் வெளிநாட்டு ஊடக நிறுவனங்களில் பணியாற்றும் இலங்கை ஊடகவியலாளர்களை சந்தித்த போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

மேலும், 2020 ஆம் ஆண்டு பாட்டலி சம்பிக்க ரணவக்கவே ஜனாதிபதியாக இருப்பார் என பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசாரதேரர் தெரிவித்திருந்தார் என்றும் மஹிந்த குறித்த சந்திப்பின் போது சுட்டிக்காட்டினார்.

எவ்வாறாயினும், ரணவக்க தனது அரசியல் பாதையை சவாலாக ஏற்றுக் கொள்ளமாட்டார் எனவும் முன்னாள் ஜனாதிபதி கூறியுள்ளார்.

நாட்டில் சிறுபான்மை சமுதாயத்தினர் மத்தியில் தனக்கு ஆதரவு குறைந்தமையினாலேயே தான் 2015 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் தோல்வியடைந்ததாக மஹிந்த இதன்போது தெரிவித்துள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -