அஹதிய்யா பாடசாலை மாணவர்களுக்கு சீருடைகளை வழங்கிவைப்பு..!

கௌரவ வடக்கு மாகாணசபை உறுப்பினர் அய்யூப் அஸ்மின் அவர்களுடைய வருடாந்த பிரமான அடிப்படையிலான நிதி ஒதுக்கீட்டு 2016 இன் கீழ் யாழ் மாவட்டத்தில் 13 ஆம் கட்ட உதவித்திட்டமாக யாழ் ஒஸ்மானியாக் கல்லூரியில் இயங்கி வரும் ஞாயிறு அஹதிய்யா பாடசாலை மாணவர்களுக்கான சீருடைகளை கையளிக்கும் நிகழ்வு கடந்த 2016.12.23 ஆம் திகதி வெள்ளிக் கிழமை மாலை 4.00 மணியளவில் யாழ் ஒஸ்மானியாக் கல்லூரி மஹ்மூத் மண்டபத்தில் இடம் பெற்றது. 

இத் திட்டத்திற்காக 104 000 .00 ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும். மேற்படி நிகழ்வில் கௌரவ வடக்கு மாகாணசபை உறுப்பினர் அய்யூப் அஸ்மின் அவர்கள், அஹதிய்யா பாடசாலை நிர்வாகத்தினர் சார்பாக எம்.எல். லாபிர் மற்றும் சகோதரர் ஐ.எல்.நிராஸ், யாழ் ஒஸ்மானியாக் கல்லூரி அதிபர், யாழ் ஹதீஜா பெண்கள் கல்லூரி அதிபர், சமூக ஆர்வலர்களான ஜனாப் நிபாஹிர், ஜனாப் சாலி, ஜனாப் நெய்னா முகமட், ஜனாப் ஜவ்பர்டீன் மற்றும் பள்ளிவாயல் நிர்வாகிகள், கிராம மட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள் உட்பட கௌரவ மாகாணசபை உறுப்பிரின் முகாமைத்துவ உதவியாளர் என். எம். அப்துல்லாஹ், அஹதிய்யா பாடசாலை மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர். மேற்படி நிகழ்வின் போது இலங்கை முஸ்லிம் மீடியா போரத்தின் யாழ் மாவட்ட இணைப்பாளராக நியமனம் பெற்றுள்ள மூத்த ஊடக வியலாளரான எம். எல். லாபிர் அவர்கள் சமூக சேவையாளர் ஜனாப் நிலாம் அவர்களினால் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும். 
தகவல் : என். எம். அப்துல்லாஹ்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -